சந்தியா வந்தனம் (Season 1) இறுதி அத்தியாயம்
Sandhiya Vandhanam (Season 1) Last Episode
தான் மிக முக்கியமாக கருதிய இந்த உரையாடல் இப்படி முடிந்ததில் வருத்தத்தோடும், வர்ஷாவின் நிலையை பற்றிய கவலையோடும் உறங்க சென்றாள். மறுநாள் காலை எழுந்த போது ஆதித்யன் அருகில் இல்லை. அனேகமாக Jogging போயிருப்பார் என ரெடி ஆனாள்.Office கிளம்பும் போது ஆதித்யன் ஹாலில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தனது laptop bag-ல் எதையோ எடுத்து வைத்துக் கொண்டே ஆதித்யனிடம். ‘நீங்க work from home தானே?. Cook பண்ணிடுவீங்கல ?’ என கேட்டு தானே நிம்மதி அடைந்து கொண்டாள்.
‘ஆம்’ என தலையாட்டினார் ஆதித்யன்.
‘இன்னிக்கு Resignation submit பண்ணினா ok தானே? ‘ என எதற்கும் confirm செய்து கொண்டாள் சந்தியா. இன்னும் ஓரிரு மாதத்தில் Australia shift ஆக வேண்டுமென்றால் இப்போது resign செய்தால் தான் சரியாக இருக்கும் என்ற கணக்கு சந்தியாவுக்கு.
👍 என கையை உயர்த்தி காண்பித்தார் ஆதித்யன்.
‘I didn’t make much headway yesterday ப்பா. I’m sure you will speak to Varsha today’ என மெதுவாக சொல்லிவிட்டு ஆதித்யனின் தலையை கோதிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படு வேகமாக ஆதித்யன் நெற்றியில் முத்தமிட்டு ஒரு மெல்லிய புன்னகை உடன் சென்ற சந்தியா தனக்கு பிடித்த cotton புடவையில், நெற்றி வகிட்டில் சின்னதாக குங்குமத்தோடு சற்றே பூரிப்போடு இருந்தாள்.
![]() |
சந்தியா வந்தனம் (Season 1) இறுதி அத்தியாயம் |
ஒரு பத்து மணியளவில் எழுந்த வர்ஷாவுக்கு அன்று பழைய comfort feel திரும்ப வந்திருந்தது. காரணம் ஆதித்யன் மட்டுமே வீட்டில் இருந்தது. சந்தியா வீட்டில் இல்லை என்று உறுதி செய்து கொண்ட வர்ஷா, கிச்சனில் நுழைந்த போது ஆதித்யன் மிகுந்த மும்முரத்தோட சமைத்து கொண்டருந்தார்.
‘Are you on vacation today?’.
‘Nope. I’m working from home.’ என சலனமில்லாமல் சொன்னார். Work from home என்றால் 9 to 5 தொடர்ந்து 8 மணி நேரம் laptop முன் அமர வேண்டும் என்பதில்லை. முடிக்க வேண்டிய வேலையை timeline படி செய்ய வேண்டும். அவ்வளவே.
Coffee Pot-ல் வர்ஷாவிற்காக வைத்திருந்த சூடான காஃபியை வர்ஷாவிடம் கொடுத்து விட்டு ‘Hope you had a good sleep’ என்றார்.
‘ I thought Sandhiya was like another daughter to you’ என சம்பந்தமே இல்லாமல் வர்ஷா கூறிய பதிலில் சற்றே முகம் சுளித்தார் ஆதித்யன்.
‘நான் அப்படி நினைக்கலைன்னு you would have realized by now’ என எந்த expression-ம் இல்லாமல் பதிலளித்தார் ஆதித்யன்.
‘So you felt the need for a younger Woman’ என வர்ஷா சொன்ன போது need என்ற வார்த்தை விரசத்தின் வாடையை கிளறுவதாக பலருக்கு படலாம். அது ஆதித்யனுக்கு எப்படி பட்டது?
‘ I definitely like Sandhiya as my Companion’ என கூறி ‘need’ என்பதற்கு பதிலாக ‘ Companionship’ என வாதத்தின் தரத்தை உயர்த்தினார். ‘ It’s not the journey. It’s not the Destination. It’s the company that matters’ என்ற உண்மை வாழ்க்கையில் ஒரு புரிதலான துணைக்கு ஏங்குபவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். Companionship என்பது friend++ or spouse++ or partner++. அது இல்லாத போது வாழ்க்கை சுமையாகிறது. சாதாரண வலியும் வேதனையாகிறது. வர்ஷாவிற்கு ஆதித்யனின் பதில் அவளது தனிமையை highlight செய்வது போல இருந்தது.
‘Why did you hide this from me Dad? Were you ashamed ? ‘
இப்படி ஒரு accused போல் வர்ஷா கேட்டது அவரது மௌனத்தின் கனத்தை அதிகமாக்கியது. வர்ஷாவிடம் தான் இத்தனை நாள் காட்டிய gentleness, decency, respect for her privacy போன்ற எந்த courtesy-யும் தனக்கு வர்ஷா காட்டவில்லை என்பது வருத்தமளித்தது.
‘Have I ever probed your private affairs Varsha? என்று கேட்ட ஆதித்யனின் குரலின் உறுதியில் லேசான ஆதங்கம் இருந்தது.
![]() |
சந்தியா வந்தனம் (Season 1) இறுதி அத்தியாயம் |
‘அப்போ 2 days wait பண்ணி நான் வந்ததும் கல்யாணம் பண்ணிருக்கலாமே? I didn’t matter right?’ என மீண்டும் குத்தினாள் வர்ஷா.
ஆதித்யனின் மௌனம் அங்கே பலமாக ஒலித்தது. அந்த நெருடல் அவருக்கும் இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு ‘ Maybe we should have waited. Informed you before the wedding. Even if you were unhappy, atleast you would have been less disappointed. I’m sorry dear’ என்று ego ஏதுமில்லாமல் வர்ஷாவின் கையை பற்றி apologetic tone-ல் வர்ஷாவின் முகத்தை பார்த்து ஆதித்யன் கூறியதில் இருந்த genuineness வர்ஷாவிற்கு புரிந்தது.
சற்றே இளகிய வர்ஷா, ‘ No Dad. நான் இப்படி கேட்டிருக்க கூடாது. ஒரு வேளை நான் US-லேயே உங்க age-ல் ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு just inform மட்டும் பண்ணியிருந்தா நீங்க இப்படி Scene create பண்ணாம அதை accept பண்ணியிருப்பீங்க தானே?’ என்றாள்.
வர்ஷா இப்படி சட்டென realize செய்ததில் ஆதித்யனுக்கு மகிழ்ச்சியை விட பெருமிதமாக இருந்தது.
' But... ', தொடர்ந்த வர்ஷா I’ve decided to be a single mom and now I’m carrying my baby ன்னு தெரிஞ்சா என்னை accept பண்ணிப்பீங்களா Dad?’
ஆதித்யனுக்கு ஒரு விநாடி முன் வர்ஷா இளகிய போது Anti Climax ஆக தோன்றியது இப்போது எதிர்பார்க்காத Climax ஆக வெடித்தது.
‘How about Viktor, your Russian Boy Friend’
‘ He is the real Dad. But he has disowned the baby. He says he is not responsible’ என விம்மினாள் வர்ஷா. ‘ I can prove his paternity. But I don’t care Dad. He doesn’t deserve to be my Child’s Dad’.
ஆதித்யன் சற்றே மெல்லிய குரலில், ‘ Are you sure you want the baby?’
‘As much as you want me Dad’ என வர்ஷா கூறிய அடுத்த நொடி வர்ஷாவை embrace செய்தார் ஆதித்யன்.
‘How many weeks?’
‘Almost 8’
‘ ஏன் travel பண்ணின ? You could have waited’
‘ I wanted to be with you Dad . I had anyway planned this trip in advance’.
‘ ஏன் இவ்வளவு நாள் சொல்லலை?’
‘ Why did you hide it? Were you ashamed ன்னு நான் கேட்டது உங்களை மட்டுமில்ல. என்னையும் சேர்த்து தான்.
தனி ஒருவனாக kitchen-க்கு சென்ற ஆதித்யன், மூவராக வெளியே வந்தது எதிர்பாராதது தான்.
*************
வீட்டிற்கு வந்த சந்தியா அங்கு நிலவிய அமைதியை வித்தியாசமாக பார்க்கவில்லை. Dinner-ஐ தாண்டியும் அமைதி நிலவியது. முன்பை விட வர்ஷா அதிக இடைவெளியை maintain செய்தாள்.
அன்று இரவு ஆதித்யன் மெத்தையில் கண் மூடி யோசித்திருந்தார். Pregnancy-ன் முதல் trimester-ல் ரிஸ்க் எடுத்து வர்ஷா travel செய்த வருத்தம், அவளின் தற்போதைய உடல்நிலை, அவள் இறங்கியதும் தன்னால் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, வர்ஷா இன்று தன்னிடம் கேட்ட கேள்வியில் இருந்த சில நியாயங்கள், பிறக்க போகும் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு, நாளை தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கான பொறுப்பு என அழுத்தங்கள் அவரது நெற்றியின் சுருக்கங்களை அதிகமாக்கின. ‘ என்னப்பா. பேசினீங்களா வர்ஷாகிட்ட?’ என யோசனையை களைத்தாள் சந்தியா.
‘நேத்து பேசினது wasn’t typical Varsha. Very surprised. உங்க கிட்ட எப்படி பேசினா?’
‘ Lets move to US சந்தியா’
‘ பொண்ணு sentiment எல்லாம் போட்டு உங்க மனதை மாத்திட்டாளா. நல்ல வேளை முதல்லயே கல்யாணம் பண்ணிட்டோம்’ என கேலியாக சொன்னாள் சந்தியா.
‘ She will be a single mom in another 8 months ’ என ஆதித்யன் கூறியது இடியாக இறங்கியது சந்தியாவிற்கு. வர்ஷா அவள் Russian boy friend குறித்து பிடி கொடுக்காமல் பேசியது இப்போது புரிந்தது. அதே போல் ஒரு Matured woman தான் தன் தந்தைக்கு சரியான match என வர்ஷா நினைத்ததற்கும் இது காரணமாக இருக்குமோ என்று ஒரு சிறு flashback சந்தியா மனதில் ஓடியது.
‘ It is possible that my child and grand child might grow up together in US’ .
‘ We can postpone ours indefinitely dear’
‘ No Sandhiya. Let things take its natural course. உன் life வேற யாருக்காகவும் compromise ஆக கூடாது. We will have children whenever that happens. என்னை கல்யாணம் பண்ணியதால் unfortunately you will be a grandma first. World’s youngest and most pretty grandma ‘ என கூறியவாறே சந்தியா மடியில் தலை வைத்து முகம் பதித்து கொண்டார் ஆதித்யன். இன்று தனக்கிருந்த அழுத்தத்தை எல்லாம் அவர் சந்தியா மடியில் கொட்டியது போல் இருந்தது.
இந்த நேரத்தில் வர்ஷாவிற்கு supportive ஆக இல்லாமல் disturbance ஆக இருந்தோமே என்ற குற்ற உணர்வும், தான் நேற்று இன்னும் கனிவாக பேசியிருக்கலாமோ என்ற குழப்பமும் சந்தியாவை வர்ஷாவின் அறையை நோக்கி இழுத்தது.
ஷர்ஷா அறை கதவை லேசாக திறந்து சந்தியா உள்ளே நுழைய, ‘ No Sandhiya. Leave me alone. ’ என பளீரென பதில் வந்தது வர்ஷாவிடமிருந்து.
( Season 1 முடிவடைந்தது).
Season 2 -வில் மீண்டும் சந்திப்போம்.!!!
1 comments:
Click here for commentsHello Mr. Subban, why didn't you publish anything for the past 2 weeks. Friday is too boring without reading your content. Please publish something interesting as usual, eagerly waiting ����